நீங்கள் அனைவருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவர். சர்வ வல்லமை படைத்தவர். கட்டுப்பாடும், இயக்கமும் தாங்கள் பல கோடி பிரம்மாண்டங்களில் உள்ள எண்ணற்ற உயிர்களின் கதிகளின்  உள்பொருளை நீங்களே முற்றிலும் அறிவீர்கள் அதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சனன்.

மேலும், எல்லா உலகங்களிலும், முக்காலங்களிலும் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தும் என்றுமே உங்கள் கண் எதிரே தெரியும். இன் நிலையில் யோகத்தில் இருந்து நழுவியவனின்  கதியை விளக்குவது உங்களுக்கு மிக எளிய விஷயம்.

நீங்களோ என் எதிரில் நேரே நிற்கிறீர்கள். பின் நான் யாரிடம் போய் கேட்க வேண்டும். உண்மையில் உங்களைத் தவிர வேறு யார்தான் இதைச் சொல்ல முடியும்.

ஆகவே, தயவுசெய்து இந்த ரகசியத்தை வெளிப்படுத்தி என் சந்தேக வலையைக் கிழித்து எறியுங்கள் என்கிறான் அர்ச்சனன்.

அர்ச்சனா! மனிதர்களுக்கு இவ்வுலகிலோ, மேலுலகிலோ அழிவு இல்லை. எனெனில் பிரியமானவனே! ஆன்மீக மேம்பாட்டிற்காக பகவானை அடைவதற்காக சாதனை புரியும் எந்த மனிதனும் தாழ் நிலையையும் அடைவதில்லை என்கிறார் கிருஷ்ணன்.

கிருஷ்ணா! இவ்வுலகிலும் மேல் உலகிலும் அழிவை அடையமாட்டான் என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! மரணத்திற்குப் பிறகும் அவன் மனிதனாகப் பிறந்தால் அவனுடைய முன்பிறவி நிலையில் இருந்து வீழ்ச்சி ஏற்படாது மேன்மை ஏற்படும்.

சொர்க்கம் முதலிய வேறு மேல் உலகங்களில் பிறப்பு ஏற்பட்டால் அங்கும் வீழ்ச்சி ஏற்படாது மேன்மை ஏற்படும்.

இதன் காரணமாக அவனுக்கு இவ்வுலகிலோ, பரலோகத்திலோ எங்குமே அழிவு ஏற்படாது. அவன் எங்கே இருக்கிறானோ, அங்கு இருந்தபடியே பரமாத்மாவை நோக்கிச் செல்ல வழியில் மேலும் முன்னேறிக்கொண்டே இருப்பான்.

இறப்பிற்கு பின் அவன் வஞ்சிக்கப் படுவதில்லை. யோக சித்தியாகி பரமாத்மாவை அடைவதில் இருந்து வஞ்சிக்கப் படுவதில்லை என்று கிருஷ்ணன் விவரிக்கிறார்.

கேசவா! ஆன்மீக மேம்பாட்டிற்காக சாதனை புரிபவன் தாழ்நிலையை அடைய மாட்டான் என்பதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! ஆன்மீக மேன்மைக்காக சாதனை செய்யும் சாதகனுக்கு எந்த ஒரு காரணத்தாலும் ஒரு பொழுதும் பன்றி, நாய், புழு, பூச்சி முதழிய இழிபிறப்போ, நரகத்தை அடைவதாகிய   தீயகதியோ ஏற்பட முடியாது என்று ஆறுதல் கூறுகிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply