கேசவா! வசப்பட்ட மனதின் இலக்கணத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சனன்.
அர்ச்சனா! மனம் வசப்பட்டு விட்டால் அதன் சஞ்சலம் பெரிதும் கலக்கும் தன்மை மிகுந்த வலிமை, முரட்டுப் பிடிவாதம் இவை அகன்று விடும்.
நேர்மையாகவும், எளிமையாகவும், அமைதியாகவும் பின்தொடரும் சீடனைப் போல சொன்னபடி செய்யும்
எப்போதும் எங்கே எத்தனை நேரம் ஆனாலும் இரு என சொன்னால் அப்படியே அசைவின்றி இருக்கும். அப்படி நீடித்து நிலைத்து இருப்பதில் முரண்டு பிடிக்காது.
புலன்களின் இலுப்புக்கு உட்பட்டுப் போக விரும்பாது, தானும் வேறு விரும்புக் கொல்லாது, சோர்வடையாது, தொல்லை தராது,
மிகவும் அமைதியுடன் இஷ்டமான பொருளில் சேர்ந்து இருக்கும்.பிறகு தனியாக மனம் என்பது இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியாமல் போகும் இதுதான் வசப்பட்ட மனதின் உண்மையான இலக்கணம்.
கேசவா!மனதை வசப்படுத்தி விட்டவன் முயற்சி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சனன்.
அர்ச்சனா! மனதை வசப்படுத்துவதற்குரிய சாதனைகள், மனம் வசப்பட்ட பிறகும் சிரத்தையுடனும், அன்புடனும், பரமாத்மாவை அடையும் நோக்கத்துடனும் செய்து வந்தால் அவற்றின் மூலம் சமத்வயோகத்தை அடைய முடியும் என்கிறார் கிருஷ்ணன்.
கிருஷ்ணா! யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும் மன அடக்கம் இல்லாமையினால் மரணத் தருவாயில் யோகத்தில் இருந்து மனம் நலவிய இத்தகைய சாதகனான யோகி பகவானின் தரிசனத்தை அடையப் பெறாது போனால் எந்த கதியை அடைவான் என கேட்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! உடலில் இருந்து உயிர் பிரியும் போது சம பாவனை ஆகிய யோகத்தில் இருந்தும் பகவானிடம் இருந்தும் மனம் பிரிந்து விட்டால்,
மனம் யோகத்தில் இருந்து நழுவி விடும். இப்படி மனம் நழுவுவதற்கு மனச்சஞ்சலம், பற்றுதல், ஆசை, உடல் வேதனை, நினைவிலத்தல் முதலிய பல காரணங்கள் ஆகும் என்கிறார் கிருஷ்ணர்.
கேசவா ‘கதி’ என்பதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ஜுனன்.
அர்ச்சனா ‘கதி’ என்ற சொல் இறந்த பிறகு ஏற்படும் விளைவைக் குறிப்பதாகும் என்கிறார் கிருஷ்ணன்.
அகன்ற தோள்களை உடையவனே! தங்களை அடைகின்ற மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி, பிடிப்பு இல்லாத மனிதன் இரண்டு வழிகளில் என்றும் நழுவி சிதறிய மேகம் போல அழிந்து விடமாட்டானா என கேட்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! மனதின் சஞ்சலத்தினாலும், விவேகம், வைராக்கியம் இவற்றின் குறைவினாலும் மனம் நழுவி அதன் விளைவாகப் பரமாத்மாவை அடைய இயலாமல் போவது ஒரு புறம்.
பயன்களின் பற்றைத் திறந்துவிட்ட படியால், புண்ணிய கர்மங்களின் பயனான சொர்க்கம் முதலிய உலகங்களும் கிடைக்காமல் போவது மறுபுறம்.
பகவானை அடைவதற்கு எப்புறம் போவது என்று மனிதன் மயங்கி ஒரு வழியிலும் பிடிப்பில்லாமல் போவது என்பதாகும் என்கிறார் கிருஷ்ணன்.
