கிருஷ்ணா! மனதை அடக்குவது காற்றை அடக்குவது போல மிகவும் கடினமான செயல் என்று நினைக்கிறேன். இதன் கருத்தை விபரியுங்கள்  என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! சஞ்சலமாகவும் மிகவும் கலக்கக் கூடியதாகவும் இருப்பதால், மனதை அடக்குவது கடினமான செயல்.

இதை நிருபிப்பதற்காக காற்றை உதாரணமாகக் காட்டுகிறார் ‘உடலில் இடைவிடாது சஞ்சரிக்கும் பிராணவாயுவை’ பிடிவாதம், ஆராய்ச்சி, விவேகம் இவற்றால் அடக்குவது எவ்வளவு கடினமோ அதுபோல போகப் பொருட்களில் இடைவிடாது அலைந்து கொண்டிருக்கும் சஞ்சலமானதும் மிகவும் கலக்கக் கூடியதும் பலமானதும் திடமானதுமான மனதைத் தடுத்து நிறுத்துவதும் மிகவும் கடினமான செயல் என்று கூறுகிறார் கிருஷ்ணன்.

கிருஷ்ண பகவானை! என் மனம் மிகவும் சஞ்சலமானது என்னுடைய திறமையினால் இதை அடக்குவது மிகவும் கடினம் என நினைக்கிறேன் “உங்களுக்கு பக்தர்களின் மனதை ஈர்ப்பது இயல்பு, எளிதும் கூட ஆகவே, கிருபை கொண்டு என் மனதை உங்கள் பால் இழுத்துக் கொள்ளுங்கள்” என வேண்டிக் கொண்டு கேட்கிறான் அர்ச்சுனன்.

நீண்ட புஜங்களுடையவனே அர்ச்சனா! சந்தேகம் இன்றி மனம் சஞ்சலமானது தான் இதை வசப்படுத்துவதும் கடினம் தான்.

  குந்தியின் மகனான அர்ச்சுனா
அப்யாசத்தாலும், வைராக்கியத்தினாலும் மனம் வசப்படுத்தப்படுகிறது. என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! ‘அப்யாசம்’ என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! மனதை மற்ற விசயங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட இலக்கில் நிலைக்க வைக்கும். அந்தப் பொருளாகவே ஆகும்.

இலக்கியப் பொருளில் ஈடுபடுத்தும் முயற்சிதான் இங்கே, ‘அப்யாசம்’ எனப்படுகிறது. எனவே, பரமாத்மாவே இலக்காக ஆக்கி மன ஓட்டங்களின் பெருக்கைத் திரும்பத் திரும்ப பகவானிடமே ஈடுபடுத்தும் முயற்சிக்கு ‘அப்யாசம்’என்று பெயர் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply