கேசவா / ஞானத்தைப் பெறுவதற்கு சிரத்தையும், ஒருமைப்பாடும் அவசியம் என்றீர்கள் அதனை விவரித்துக் கூறுங்கள் என்கிறான் அர்ஜுனன் ,
கிருஷ்ணா/ நீங்கள் கர்மங்களுடைய சந்யாசத்தைப் பற்றியும், பின்னர் கர்மயோகத்தைப் பற்றியும் புகழ்ந்து பேசுகிறீர்கள் .இவை இரண்டில் எந்த ஒன்று எனக்கு நிச்சயமாக மேன்மையைத் தரக்கூடியதோ அதைச் சொல்லுங்கள் என்கின்ற அர்ஜுனன் …..
‘கிருஷ்’ என்றால் ஈர்ப்பது ‘ண’ என்றால் பரமானந்த சுரூபன் என்று பொருள் அனைத்தையும் தன் பால் ஈர்க்கின்ற கிருஷ்ணா / என அளித்த அர்ஜுனன் ….
”நீங்கள் எல்லா வல்லமையும் படைத்தவர் எல்லாம் அறிந்தவர் .பரமேசுவரன்.ஆகவே, உங்களால் மட்டுமே என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்ல முடியும்” என்று குறிப்பிடுகிறான் அர்ஜுனன் .
சன்சாயசம், கர்மயோகம் இரண்டுமே மிகவும் மேன்மையைத் தருபவை. கர்ம சன்யாசம் என்றால் ‘ஞானயோகம் ‘ கடமைகளைச் செய்து கொண்டே துறப்பதாகும்.
கர்மயோக, ஞானயோகம் இரண்டையும் ஒருங்கே புகழ்கிறீர்கள் .அவை வேறு வேறானவை என்றும் சொல்கிறீர்கள் .இவை இரண்டில் எனக்கு எது சிறந்ததோ அதைச் சொல்லுங்கள் என்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா/ கர்ம சன்யாசம், கர்மயோகம் இரண்டுமே மிகவும் மேன்மை அளிப்பவை தான். ஆயினும் இவ்விரண்டிலும் கர்ம சன்யாசத்தைக் காட்டிலும் ,கர்மயோகம் சாதனை முறையில் எளிதானதால் சிறந்தது என்கிறார் கிருஷ்ணன் .
கேசவா”சன்யாசம்’என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதை விளக்குங்கள் என்கிறார் அர்ஜுனன் .
அர்ஜுனா’ சன்’ என்றால் நல்ல முறையில் நியாசம் என்றால் தியாகம் செய்வது. எனவே சன்யாசம் என்றால் நன்றாக தியாகம் செய்வது என்பதாகும். அதாவது முற்றும் துறப்பது சன்யாசம் ஆகும் .
சன்யாசம் என்பது முற்றும் துறப்பவர்களுக்கு மட்டும் அல்ல. கர்மயோகியையும் சன்யாசம் என்றேன். ஞான நிஷ்டையும் சன்யாசம்தான் ‘சன்யாசம்’ என்ற சொல் ஒரு பொருளில் வரவில்லை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு பொருட்களில் வருகிறது என்றவர் அதன்வேறுபாட்டை விளக்குகிறார் .
கர்மயோகி கர்மத்தையும் , கர்மத்தின் பயனையும் பரமாத்மாவையும் , தன்னையும் வெவ்வேறாகப் பார்த்து பற்றுதலையும் பலனையும் அர்ப்பணம் செய்வான் .
பரமாத்மாவைத் தன்னில் இருந்து வேறாக நினைப்பான் .
கர்மம் உண்டு கர்மத்திற்குப் பயனும் உண்டு என்று நினைப்பான் .சந்நியாசி மாயையினால் உண்டான எல்லா குணங்களும் , குணங்களில் செயல்படுகின்றன என அறிந்து மனம் புலன்கள், உடல் இவற்றால் ஆகும் எல்லாச் செயல்களிலும் ‘தான்கர்த்தா’ என்ற அபிமானம் இன்றி முழுமையாக சத், சித் ஆனந்தமயமான பரமாத்மாவின் சுயரூபத்திலேயே ஒன்றி விடுவான் .
பரமாத்மா வேறு, தான் வேறு என்று நினைப்பதில்லை .
பிரமத்தைத் தவிர கர்மமோ, கர்மபலனோ இருப்பதாகவே நினைப்பதில்லை .மேலும் அவற்றோடு தனக்குத் தொடர்பு இருப்பதாகவும் நினைப்பதில்லை .
இவ்விதம் இருவருக்கும் சாதனை முறையில் மனப்பாங்கிலும் கிழக்கு , மேற்கு போன்ற பெரிய வேறுபாடு இருக்கிறது ..
இந்த நிலையில் இரண்டு யோகத்தையும் ஒருவன் ஒரே சமயத்தில் கடைபிடிக்க முடியாது .இரண்டுமே சேர்ந்து மேன்மை அளிக்கும் என்றால் இரண்டில் எது சிறந்தது என்று ‘நீ’ கேட்டிருக்க மாட்டாய் .
அர்ஜுனா/ உனக்கு சன்யாசயோகத்தைக் காட்டிலும் கர்மயோகம் சிறந்தது எனக் கூறிய கிருஷ்ணன் ஏன் என்பதையும் விவரிக்கிறார் .
கர்மயோகி கர்மம் செய்து கொண்டே இருந்தாலும் எப்பொழுதும் அவன் சன்யாசிதான். அனாவசியமாக சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு விரைவில் என்னை வந்து அடைகிறான் .
ஒவ்வொரு நிலையிலும் அவன் அருளைப் பெறுகிறான். கர்மயோகத்தைச் சிறிதளவே கடைப்பிடித்தாலும் பிறப்பு, இறப்பு என்ற பெரிய பயத்தில் இருந்து தப்பி விடுகிறான் .
ஆனால் ஞானயோகம் கஷ்டமானது முதலில் கர்மயோகத்தைக் கடைப்பிடிக்காமல் ஞானயோகம் செய்வது கடினம் என்பதால் ஞானயோகத்தைக் காட்டிலும் கர்மயோகம் சிறந்தது என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
மேலும், அர்ஜுனா, எவன் எதையும் வெறுப்பதில்லையோ, எதையும் விரும்புவதில்லையோ அந்த கர்மயோகி எப்பொழுதும் சந்நியாசியேதான் என்று அறியத்தக்கவன் .
ஏனெனில் விருப்பு , வெறுப்பு எனும் இரட்டைகள் அற்றவன் எளிதாகவே சம்சார பந்தத்தில் இருந்து விடுதலை பெறுகிறான் என்கிறார் கிருஷ்ணன் .’
கேசவா/ ”கர்மயோகியை நித்ய சன்யாசி ” என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா/ கர்மயோகி எவரிடமும் வெறுப்பு கொள்வதில்லை. எந்தப் பொருளையும் விரும்புவதும் இல்லை. இரண்டிற்கும் முற்றிலும் அப்பாற்பட்டவன் ஆகிறான்.
உண்மையில் ‘சந்யாசம்’ என்று இந்நிலைக்கு பெயர் விருப்பு, வெறுப்பற்றவன் தான் உண்மையான சந்யாசி அவன் சன்யாச ஆசிரமத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை .
சன்யாசயோகத்தில் ஈடுபடவும் தேவையில்லை.கர்மயோகியை ‘நித்யசன்யாசி’ என்று கூறலாம். எல்லாக் கர்மங்களையும் செய்து கொண்டே இருந்தாலும் அவன் எப்போதும் சன்யாசியே/
மேலும் ‘அவன் சுகமாகவும், எளிதாகவும் கர்மபந்தத்தில் இருந்து
விடுதலை பெறுவான் என்று அவனுடைய பெருமையை வெளிப்படுத்துகிறார் கிருஷ்ணன் .
‘கேசவா/ கர்மயோகி கர்மபந்தத்தில் இருந்து
எப்படி இனிதே விடுதலை பெறுகிறான் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா/ மனிதனுக்குத் தன் முன்னேற்றத்தில் தடையாக இருப்பவை விருப்பு, வெறுப்புதான் இவற்றால் அவன் கர்மபந்தத்தில் சிக்குகிறான் .
கர்மயோகி விருப்பு, வெறுப்புற்று பகவானுக்காகக் கடமைகளை ஆற்றுகிறான். பகவானுடைய கிருபையினால் எளிதாகக் கர்ம பந்தத்தில் இருந்து விடுதலை பெறுகிறான் .
பிறப்பு , இறப்பு என்ற சம்சார சக்கரத்தின் சுழற்சியில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதுதான் பந்தத்தில் இருந்து விடுதலை பெறுவதாகும் என விவரித்தார் கிருஷ்ணன் .
அர்ஜுனா/ சன்யாசமும், கர்மயோகமும் வெவ்வேறு பயன் தரக்கூடியவை என்று அறியாதவர்கள் கூறுகிறார்கள் .
அப்படியல்ல ஏனெனில் இவற்றில் ஒன்றையாவது உறுதியாகப் பற்றிக் கொண்டுள்ள மனிதன் இரண்டின் பயனான பரமாத்மாவாகிய என்னை அடைகிறான் என்கிறார் .
தொடரும் ….