மாகாபாரதக் காவியம் உருவானதும் தமது புத்திரரான சுகருக்கு வியாசர்  அதை கற்றுக்கொடுத்தார்.நாரதர் இதனைக் கற்றுத் தேவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.இவ்வாறு மகாபாரதக் காவியம் பரவி மானிடர்களை அடைந்தது.


அக்காலம் முதல் இக்காலம் வரை சொத்துச் சண்டை குடும்பத்திற்கு குடும்பம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.ஆனால் தர்மம், அதர்மம் என்பதை பிரித்து காட்டுவதே கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த சண்டையை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

"தர்மத்தினை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்:\’ என்கிற உணர்வினை உணர்த்துகிறது.திருதிராஷ்டிரரும் ,பாண்டுவும் அண்ணன், தம்பிகள் மூத்தவரான திருதிராஷ்டிரருக்கு கண் பார்வை இல்லாததால் பாண்டு மன்னனாக அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தார்.
திருதிராஷ்டிரருக்கும் ,காந்தாரிக்கும் நூறு குழந்தைகள் பிறந்தார்கள்.அவர்கள் கெளரவர்கள்  என்று அழைக்கப்பட்டார்கள்.
பாண்டுவுக்கும் ,குந்தி தேவிக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.இவர்கள் பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.



திருமணத்துக்கு முன்னதாக துர்வாச முனிவருக்கு குந்தி பணிவிடை செய்ததால் ,மகிழ்ச்சி அடைந்த துர்வாசர், N’மானசீகமாக ஒருவரை என்னும் போது கருத்தரிக்கும் வரம் கொடுத்தார்.அதை சோதிக்க எண்ணிய குந்தி கன்னியாக இருக்கும் போதே சூரியபகவானை நினைக்க குந்திக்கு கர்ணன் பிறந்தான்.உலகத்திற்கு அஞ்சிய குந்தி கர்ணனை யாரும் அறியாவண்ணம் ஆற்றிலே விட்டு விட்டாள். பாண்டு மன்னர் இறந்து போனார்.பாண்டவர், கெளரவர் அனைவரும் ஒன்றாகவே சேர்ந்து அன்பாக பழகி வந்தனர்.
தர்மர் பெயருக்கு ஏற்றாற்போல் தர்மசீலராக எல்லோராலும் பாராட்டப்பெற்றார். பீமன் வீரமும், பலமும் மிக்கவனாக காணப்பட்டான்.இவர்கள் இருவரையும் துச்சாதனனுக்குப் பிடிக்காமல் பொறாமை கொண்டான். அர்ச்சுனன் மிகவும் அழகானவனாகவும் ,கல்வி,வில்வித்தைப் போர் பயிற்சிகளிலும் கைதேர்ந்தவனாக இருந்தான்.இவனது திறமையைக் கண்டு பொறாமை கொண்டான் துரியோதனன். நகுலன்,சகாதேவன் இருவரும் சாஸ்திரம் சொல்லுதலிலே மிகவும் சிறந்தவர்களாக விளங்கினார்கள்.ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் நன்றாக பதில் அளிப்பார்கள். இது கெளரவப் பிள்ளைகளுக்கு பொறாமையை வளர்த்தது.
மொத்தத்தில் திறமை உள்ள பாண்டவர்களை பார்த்து திறமை குறைந்த கெளரவர்கள் பொறாமை கொண்டதால்தான் பாரதப் போர் மூண்டது.
முன்னதாக போரை  தடுக்க கிருஷ்ணர் தூது சென்றார். தாம் தூது வந்தும் பயனில்லாததினால் யுத்தத்தை தவிர்க்க இயலாது என்ற நிலைக்கு வந்தார் கிருஷ்ணர்.இவர்கள் மூலம் உலகிற்கு பயன் படக்கூடிய  தத்துவத்தின் விளக்கமே அர்ச்சுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தது.
விதியை யாராலும் மாற்றமுடியாது.ஆட்டுபவனும் நான்தான் ஆட்டுவிப்பவனும் நான் தான் என அர்ச்சுனன் போர் செய்ய தயங்கும் போது கிருஷணர்  அர்ச்சுனனுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்க உபதேசித்ததே கீதை.


அர்ச்சுனனுக்கு என்ன உபதேசித்தார்,அதன் வழியாக உலகுக்கு என்ன கூறுகிறார்.நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பனவற்றை எல்லாம் இனி விரிவாக காண்போம்.

குருசேத்திரப் போர்க்களத்தில் அர்ச்சுனன் போரிடமாட்டேன் என பின் வாங்கினார்.அவரது மனக்கலக்கத்தை அகற்றி புத்தி புகட்டியதே கீதை.
தனிமனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் சிக்கல்களை போக்க வல்ல அறிய பொக்கிஷம் கீதை.

கிருஷ்ணரின் தியாகம், புலனடக்கம், தவநெறி,செயல்வேகம், பக்தி மார்க்கம், ஞானயோகம் ஆகிய சாதனை முறைகளுக்கும், குண,கர்ம அடிப்படையில் படைத்த படைப்பு  மக்களுக்கு தனிப்பெரும் விளக்க நூலாக கீதை விளங்குகிறது.
Share.

Leave A Reply