ஊருக்கு வெளிப் புறத்தில் இருக்கும் ஒரு மலை நம் கண்ணுக்குத் தெரிகிறது. பார்க்கும்போது மிக அருகில் இருப்பது போன்ற காட்சி தெரிகிறது.
மலையில் ஏறி இயற்கை காட்சி காணலாம் என சென்றால். செல்லச்…. செல்ல மலை வெகு தூரத்தில் இருப்பதை உணர முடிகிறது.
கண்ணுக்குப் பக்கமாக தெரிந்த ஒரு காட்சி! உணர்விற்கு வெகு தூரத்தை உணர்த்துகின்றது. அது போல் தான்….
இறைவனாகிய உருவம் நம் கண் முன் காட்சி தந்தாலும், அவனை அடையும் மார்க்கம் தூரத்தில் இருக்கிறது. என்பதை நாம் உணர்ந்து அவனை அடையும் மார்க்கத்தை அறிய வேண்டும்.
அரசு பொருட்காட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு சற்று தள்ளிப் போகும் போது இரைச்சலான சத்தம் மட்டும் கேட்கிறது.
அதன் உள்ளே போன பிறகு ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான பொருள் கேட்டு வாங்கும் சத்தம் துல்லியமாக கேட்கிறது.
தூரத்தில் ஒரே இரைச்சலாக கேட்ட சத்தம் அருகில் கேட்கும் போது ஒவ்வொருவர் பேசுவதும் தனித்து கேட்க முடிகிறது.
அது போல் இறைவனை விட்டு தள்ளி இருக்கும் போது தான் துன்பமாகிய இரைச்சல் நம்மை கவ்விக் கொள்கிறது.
இறைவன் அருள் பெற்று அவன் அருகில் வரும் பாக்கியம் கிடைத்துவிட்டால். துன்பமாகிய இரைச்சல் நம்மை விட்டு விலகி இன்பமாகிய ஆனந்த நிலையை உணர முடியும்.
இந்த ஆனந்த நிலையை அடைவது அவ்வளவு சுலபம் என்று எண்ணிவிட முடியாது.
காலங்கள் மாறுவது போல் பருவ காலம், இலையுதிர் காலம் ,மழைக்காலம், பனிக்காலம் என மாறி… மாறி வந்து கொண்டே இருக்கும்.
இந்த கால நிலைகளை காலத்துக்கு தக்கவாறு இயற்கையுடன் ஒன்றி ‘ஆசை’ என்னும் ‘அரக்கனை’ அளித்து.
‘ நான்’ என்னும் ‘அகங்காரத்தை’ வேரறுத்து. எல்லாம் இறைவன் செயல் .எது நடந்தாலும், என்ன நடந்தாலும் ,இறைவன் செயல் என எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் இது இறைவனுக்கு என சமர்ப்பிக்கும் .
மனப்பக்குவம் பெற்ற அவன்! எல்லாம் என சரணாகதி அடையும் போது எந்தத் துன்பமும் அவனை தாக்குவது இல்லை .
வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் ,பெரியவன் சிறியவன், வெறுப்பு, விருப்பு, கோபம் இவற்றிற்கு எல்லாம் அப்பாற் பட்டவனாக….
எல்லாம் இன்பமயமாக, ஆனந்த மயமாக இருப்பதை அவன் மனம் உணரும் அந்த நிலையை இறைவனை காணும் ஆனந்த நிலையாகும்.
Photo by Anton Polyakov on Pexels.com