அடிமையாய் இருந்தோம்
அல்லல் பட்டோம்
அமைதியாய் இருந்து
சுதந்திரம் பெற்றோம்

குற்றங்கள் குறைப்போம்
குன்றென வளர்வோம்
ஒற்றுமை வளர்த்து
ஓங்கி நிற்போம்

திட்டங்கள் போடுவோம்
திறமை வளர்க்கும்
சட்டங்கள் போடுவோம்
சரித்திரம் படைப்போம்

அறிவியல் ஆய்வு செய்து
அகிலத்தை வெல்வோம்
கணிப்பொறி இயக்கி
காலத்தை வெல்வோம்

ஏவுகணை படைத்து
எங்கும் செல்வோம்
பாரதப் பெருமையை
அங்கும் காப்போம்

இந்திய நதிகளை
இணைத்து மகிழ்வோம்
இருக்கும் சாதிகளை
ஒழித்து மகிழ்வோம்

பிறக்கும் குழந்தைகளை
படிக்கச் செய்வோம்
படித்த இளைஞர்கள் வழியில்
இந்தியாவின் பெருமையை போற்றுவோம்

புதிதாய் பிறந்த மனிதராய்
புதுமைகள் செய்திட
புதியதாய் பூத்த மலராய்
மலரட்டும் புதிய பாரதம்

Share.

Leave A Reply